ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை

ஏர் இந்தியா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்

Update: 2020-01-03 21:24 GMT
ஏர் இந்தியா ஊழல்  வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக ப. சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி சம்மன் அனுப்பியது. ஆனால், அப்போது அவர், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்தார். இந்நிலையில், ப. சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை  புதிதாக மீண்டும்  சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமையன்று ஆஜரானார்.
Tags:    

மேலும் செய்திகள்