கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா வழக்கு குற்றவாளி : குடியரசுத் தலைவர் பேச்சை தொடர்ந்து நடவடிக்கை
நிர்பயா வழக்கு குற்றவாளியான வினய் சர்மா, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள கருணை மனுவை திரும்பப் பெறுவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.
நிர்பயா வழக்கு குற்றவாளியான வினய் சர்மா, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள கருணை மனுவை திரும்பப் பெறுவதாக கடிதம் அனுப்பியுள்ளார். இதன் நகலை உள்துறை அமைச்சகத்துக்கும் வினய் சர்மா அனுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகம் தமக்கு அனுப்பிய கருணை மனுக்கள் மீது தாம் முடிவெடுக்கவில்லை என குடியரசுத் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமது கட்சிக்காரர் புதிதாக வழக்கை நடத்த விரும்புவதாகவும், அதனால் கருணை மனுவை திரும்பப் பெற விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.