தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு : ஆயுதங்களுடன் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள்

தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-12-04 18:29 GMT
தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் வெங்காயம் மிகவும் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள புகைபடங்கள் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிரை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். விலை ஏற்றத்தால் தங்களது நிலத்தில் பயிரிட்டுள்ள வெங்காயத்தை மக்கள் திருடி விடுவார்களோ என்ற அச்சத்தில் இரவிலும் பயிர் நிலத்தில் கம்பு மற்றும் அரிவாள் கொண்டு பாதுகாத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்