மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 % அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீத‌ம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Update: 2019-10-09 12:05 GMT
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீத‌ம்  அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதன்படி தற்போது இருக்கும் 12 சதவீத அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 16 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும், என்றும், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதார‌ர்கள் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி ஜூலை மாத‌த்தில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்