அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலை நிறுத்தம் - நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வழங்க கோரிக்கை

நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-09-18 12:08 GMT
நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனுடன் போனஸ் தொகையை வழங்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் இந்த வேலை நிறுத்தமானது  பயணிகளுக்கு பெரிய அளவில் பதிப்பை ஏற்படுத்தவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்