கனமழையில் சிக்கிய நோயாளிகள் : பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழு

குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன.

Update: 2019-08-02 08:41 GMT
குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. வதோதரா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 500 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். வதோதரா நகரத்தில், வெள்ளத்தால் சூழப்பட்ட ஒரு மருத்துவமனையில் சிக்கித் தவித்த நோயாளிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்