பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் : எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-05-21 18:53 GMT
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேசத்தில் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தவர் திரோங் அபோ. இந்நிலையில், மேற்கு கோன்சா பகுதியில் உள்ள திரப் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வான திரோங் அபோ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேகாலயா முதலமைச்சர்  கன்ராட் சங்மா, தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்