பிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்

பிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-24 06:22 GMT
பிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் வீட்டில் நடந்த நேர்காணலின் போது, அரசியல் அல்லாத, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அக் ஷய்  சில சுவாரஸியமான கேள்விகளை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, தாம்  சன்னியாசியாக மாற நினைத்ததாகவும், பிரதமராக அல்ல என்றும் கூறினார். தனக்கு கோபம் வராததை கண்டு மக்கள் ஆச்சரியப்படுவதாக கூறிய மோடி, கோபம் வரும் சூழலை தாம் ஏற்படுத்திக்கொள்வதில்லை என்றார். நாட்டிற்கு சேவை செய்ய சிறு வயதிலேயே தாயைவிட்டு பிரிந்து வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். எதிர்க்கட்சிகளில் பல நண்பர்கள் இருப்பதாகவும், அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆண்டு தோறும் தனக்கு குர்தா மற்றும் இனிப்புகள் அனுப்புவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில் தனக்கு அதிக ஆர்வம் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்