மின்மயமாக்கப்பட்ட டீசல் என்ஜின் ஓட்டம்: வாரணாசியில் பிரதமர் தொடங்கி வைத்தார்

தமது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரதமர் மோடி ப​ல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-19 19:18 GMT
தமது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரதமர் மோடி ப​ல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம்  வாரணாசியில் உள்ள  டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு மையத்தில் உருவான, முதலாவது மின்மயமாக்கப்பட்ட டீசல் ரயில் என்ஜின் ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து  ஸ்ரீ குரு ரவிதாஸ் கோயிலுக்குச் சென்று வழிபட்ட அவர், குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மதன் மோகன் மாளவியா புற்று நோய் மையம் மற்றும் ஹோமி பாபா புற்று நோய் மருத்துவமனை பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்