தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களுக்கு மருத்துவமனையிலேயே திருமணம்

தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களுக்கு, மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

Update: 2019-01-12 11:36 GMT
விகாராபாத்  மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா, நவாஸ் ஆகிய இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களை பிரிப்பதினால் எந்தப் பயனும் இல்லை என்றறிந்த பெற்றோர்கள், இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, விகரபாத்தில், இருவரும் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே, நவாஸ், ரேஷ்மா பேகம் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்