ரிசர்வ் வங்கி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதுதான் - முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் கருத்து

ரிசர்வ் வங்கி, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதுதான் என்று அதன் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2019-01-11 11:23 GMT
ரிசர்வ் வங்கி, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதுதான் என்று அதன் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் குறிப்பிட்டுள்ளார்.  ஆர்.பி.ஐ. சுதந்திரமாக செயல்படும் அமைப்புதான் என்றாலும்,  நிதிக் கொள்கைகளை வகுப்பதில் அரசின் வழி காட்டுதலுக்கு ஏற்ப உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.  ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசுக்கு வழங்குவது தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும் குழுவின் தலைவராக சமீபத்தில் மத்திய அரசு இவரை நியமனம் செய்தது. இந்த குழு தனது முதலாவது கூட்டத்தினை இந்த வாரம் நடத்தியுள்ளதுடன்,  அடுத்த 90 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்