சபரிமலையில் போராட்டம் எதிரொலி : 150 பேரை தேடும் போலீசார்

சபரிமலையில் சித்திர ஆட்ட திருநாளையொட்டி கடந்த 5,6 தேதிகளில் நடை திறக்கப்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2018-11-10 09:03 GMT
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சன்னிதானம், பம்பை, எருமேலி உள்ளிட்ட இடங்களில், கடந்த 5 மற்றும் 6ந் தேதிகளில் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களில் 150 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீசார், அவர்கள் மீது பெண்களை அவமதித்தல் சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் கூடி கலவரத்திற்கு திட்டமிடுதல், அரசு பணிக்கு
இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான குற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்