சபரிமலை விவகாரத்தில் உள்நோக்கத்துடன் அரசியல் செய்கின்றனர் - கேரள அமைச்சர் சைலஜா

சபரிமலை விவகாரத்தில் உள்நோக்கத்துடன், மோசமான அரசியலில் சிலர் ஈடுபட்டு வருவதாக கேரள மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-17 11:10 GMT
சபரிமலை விவகாரத்தில் உள்நோக்கத்துடன், மோசமான அரசியலில் சிலர் ஈடுபட்டு வருவதாக கேரள மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உண்மையான அய்யப்ப பக்தர்களை பற்றி தாம் கருத்து கூற விரும்பவில்லை என்றார்..  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அரசியல் சட்டப்படியானது எனவும் அதை கேரள அரசு அமல்படுத்தும் எனவும் அமைச்சர் சைலஜா தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்