சபரிமலை விவகாரம் : தலைமை செயலகம் நோக்கி கேரளாவில் பாஜக பேரணி

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் அம்மாநில பாஜக ஈடுபட்டுள்ளது.

Update: 2018-10-15 11:04 GMT
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 13ம் தேதி, கேரள மாநிலம் செங்கணூரில் சபரிமலை பாதுகாப்பு யாத்திரையை தொடங்கிய பாஜகவினர், ஆழப்புலா, கொல்லம் வழியாக திருவனந்தபுரம் நோக்கி சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றனர். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பேரணி, இன்று திருவனந்தபுரத்தில் பட்டம் எனும் பகுதியில் நிறைவடைந்தது. அங்கிருந்து அவர்கள், தலைமைச் செயலகம் நோக்கி, ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஊர்வலம் காரணமாக, கேரள தலைமைச் செயலக பகுதியில், ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.





Tags:    

மேலும் செய்திகள்