புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் 8 பேர் பணியிடமாற்றம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்படி நடவடிக்கை

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட 8 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-10-13 02:00 GMT
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட 8 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்துவரும் குமார் வணிகவரித்துறை ஆணையராகவும், திட்டத்துறை இயக்குனராக இருந்து வரும் ருத்ர கவுடு கல்வித்துறை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி ஆணையர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் அஸ்வனி குமார் பிறப்பித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்