பிரதமர் மோடிக்கு 'பூமி பாதுகாப்பு சாம்பியன்' விருது

டெல்லியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடிக்கு 'பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சாம்பியன்' விருது வழங்கப்பட்டது.

Update: 2018-10-03 08:49 GMT
* ஐ.நா. சார்பாக டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், ஐ.நா. செயலாளர் ஜெனரல் அண்டோனியா கட்டர் பங்கேற்று, பிரதமர் மோடிக்கு விருதை வழங்கினார். பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்காக, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய அண்டோனியோ கட்டர், 'பருவநிலை மாற்ற அபாயத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் தலைவர் பிரதமர் மோடி என பாராட்டினார். 

* விருதை பெற்ற பிறகு பேசிய பிரதமர் மோடி, இந்தியர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி பூண்டு இருப்பதாகவும், இந்தியர்கள் அனைவருக்குமான கவுரவம் இது எனவும் தெரிவித்தார். பருவநிலை மாற்றமும், இயற்கை பேரிடரும் நம்முடைய கலாச்சாரத்துடன் நேரடி தொடர்பு கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார்.  
Tags:    

மேலும் செய்திகள்