மகள், மருமகனை ஓட ஓட விரட்டி வெட்டிய தந்தை...

காதல் திருமணம் செய்தவர்களை கொல்ல முயற்சி : மகள், மருமகனை ஓட ஓட விரட்டி வெட்டிய தந்தை..

Update: 2018-09-20 01:33 GMT
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு,  எஸ்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த மாதவி என்பவர், எதிர்ப்பை மீறி, சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மாதவியின் தந்தை, இருவரையும்  நடு ரோட்டில் அரிவாளால் ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். தாக்குதலால் படுகாயமடைந்த மாதவியும், அவரது காதல் கணவரும், உயிருக்கு போராடிய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான மாதவியின் தந்தை மனோகரை தேடி வந்தனர் .



 

இந்நிலையில்  மகளை கொல்ல முயற்சித்த தந்தை மனோகர், ஹைதராபாத் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்