ஏழுமலையான் கோயில் 3வது நாள் பிரம்மோற்சவம் : சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தில் 3வது நாளான இன்று மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2018-09-15 06:58 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. 3-ஆம் நாளான இன்று மலையப்ப சுவாமி, சிம்ம வாகனத்தில் நரசிம்மர் அலங்காரத்தில் எழுந்தருளினார். நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதியின் இரு புறத்திலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

*  ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி சென்றனர். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி, கோலாட்டம், பரத நாட்டியம் ஆடிக்கொண்டு மாட வீதிகளில் வலம் வந்தனர். மாட வீதிகளில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்