பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்

ரயில் ஏறும் போது தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்

Update: 2018-06-29 07:11 GMT
சென்னை சென்டரலில் ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றினார். மேடவாக்கத்தை சேர்ந்த பிரியா நேற்று இரவு ஆலப்புலா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முற்பட்டுள்ளார். அப்போது அவர் திடீரென கீழே தவறி விழுந்துள்ளார். ரயில்பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே தவித்த அந்த பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பாண்டியராஜன் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். 
Tags:    

மேலும் செய்திகள்