கபர்ஸ்தான் அமைக்க ரூ.1.4 கோடி மதிப்புள்ள நிலம் - இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் வேலுமணி வழங்கினார்
கோவை மதுக்கரையில், இஸ்லாமியர்களை அடக்கம் செய்யும் இடமான கபர்ஸ்தான் அமைக்க ஒரு கோடியே 40 லட்சம் மதிப்புள்ள நிலத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை மதுக்கரையில், இஸ்லாமியர்களை அடக்கம் செய்யும் இடமான கபர்ஸ்தான் அமைக்க ஒரு கோடியே 40 லட்சம் மதிப்புள்ள நிலத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். குனியமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் கபர்ஸ்தான் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஒரு கோடியே 40 லட்சம் மதிப்புள்ள ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தை கபர்ஸ்தான் அமைப்பதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
Next Story