பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 65 நாள் பெண் குழந்தை - பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு அளித்த கொடூரம்

பிறந்து 65 நாட்களே ஆன பெண் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 65 நாள் பெண் குழந்தை - பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு அளித்த கொடூரம்
x
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, மாத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி துளசிமாதன், இவரது மனைவி முருகாயாள். முருகாயாளுக்கு கடந்த 65 நாட்களுக்கு முன்பு,  பெண் குழந்தை பிறந்த நிலையில், மகளிர் சுய உதவிக் குழுப் பணத்தைப் பெறுவதற்காக வங்கிக்கு செல்லும் வேலையிருந்ததால் பெண் குழந்தையை கணவர் துளசிமாதனிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் வங்கி வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது, கணவர் பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வலியால் துடித்துக் கொண்டிருந்த குழந்தையை, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, சேலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து துளசிமாதனின் மனைவி முருகாயாள் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்தது உண்மை என தெரிய வந்தது. குழந்தையின் கொடூர தந்தை துளசிமாதனை  காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்