கீழடி ஆராய்ச்சியை நிறுத்தியதா மத்திய அரசு? - தவறான தகவல் என அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

கீழடி ஆராய்ச்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடி ஆராய்ச்சியை நிறுத்தியதா மத்திய அரசு? - தவறான தகவல் என அமைச்சர் பாண்டியராஜன் கருத்து
x
திண்டிவனம் அடுத்த மயிலம் தமிழ் கலை அறிவியல்  கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி க்கு 4 மாதங்கள் காலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார். கீழடி ஆராய்ச்சியை அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்