சீன அதிபர் வரும்போது போராட்டம் நடத்த போவதாக தகவல் : ஊட்டியில் உள்ள திபெத் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

ஊட்டியில் உள்ள திபெத் மக்கள் சீன அதிபர் வரும்போது போராட்டம் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து , அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீன அதிபர் வரும்போது போராட்டம் நடத்த போவதாக தகவல் : ஊட்டியில் உள்ள திபெத் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
ஊட்டியில் உள்ள திபெத் மக்கள் சீன அதிபர் வரும்போது போராட்டம் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து , அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டியில் 63 குடும்பங்களை சேர்ந்த 25க்கும் அதிகமான திபெத் மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக திபெத்தை சீனாவில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி வரும் திபெத் மக்கள், சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, ஊட்டியில் உள்ள திபெத் மக்களின் விபரங்களை சேகரித்துள்ள போலீசார், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்