ப.சிதம்பரம் கைது - காங்கிரஸ் போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ப.சிதம்பரம் கைது - காங்கிரஸ் போராட்டம்
x
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர், ப. சிதம்பரத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ உள்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். 

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடியின் உருவப் படத்தை கிழித்து,  தொண்டர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன், நடந்த போராட்டத்தில் தொண்டர்கள் - போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்