ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவு - ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு எழுதிய ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவு - ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்
x
கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில்  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெற்றன. இடைநிலை ஆசிரியர் பணிக்கான இந்த தேர்வின் முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வு எழுதிய 1 புள்ளி 63 லட்சம்  பேரில் மிக குறைந்த எண்ணிக்கையிலானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் , பெரும்பாலனவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மொத்த மதிப்பெண்களான 150க்கு முன்னேறிய வகுப்பினர் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக 90 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் தேர்ச்சிக்கு  82 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு எழுதிய பெரும்பாலானவர்கள் 30 முதல் 50  மதிப்பெண்களே பெற்று இருப்பதாகவும் , இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின்   (www.trb.tn.nic.in)  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும்,  ஒவ்வொருவருடைய மதிப்பெண்களுடன் கூடிய முழுமையான  விவரம் வரும் 22 ம் தேதி வெளியிடப்படும் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்