விவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
x
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி பகுதியில் 22  கோடி ரூபாய் செலவிலான ரயில்வே நுழைவு பாலப் பணிகளை ஆய்வு செய்த அவர், பள்ளிபாளையம் அருகே பொறியியல் கல்லூரி அமையும் இடம் மற்றும் கூட்டபள்ளி அருகே தூர் வாரப்பட்ட ஏரியையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து,  செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டா விவசாயிகள் உள்பட மனு செய்துள்ள 20 ஆயிரம் பேருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்