மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்வு : நீர் மட்டம் 10 நாட்களில் 11 அடி உயர்வு
நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது. கர்நாடகாவின், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அணையின் நீர்மட்டம் 39 அடியில் இருந்து 50 அடியாக அதிகரித்துள்ளது.
Next Story