+2 பாடப்புத்தகத்தில் திரித்து அச்சடிக்கப்பட்ட விவகாரம் - கடும் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் கோரிக்கை
சென்னையில் உள்ள பல்லவன் இல்ல வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற் சங்க பேரவை அலுவலகத்தை திருமாவளவன் திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள பல்லவன் இல்ல வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற் சங்க பேரவை அலுவலகத்தை திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , +2 பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் பழமையான மொழி என திரித்து அச்சிடப்பட்டு இருப்பது வரலாற்று பிழை என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். வேலூர் தொகுதியில் வரும் 3 ம் தேதி நடைபெறும் திமுக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் தாமும் பங்கேற்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.
Next Story