குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .அங்கு இன்று முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக அருவியில் குளிக்க வசதியாக வனத்துறை சார்பில் இரும்பு கம்பிகள் 5லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒருகோடி ரூபாய் வருமானம் ஈட்டித்தரும் குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல்வேறு வசதிகளை செய்து தர வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Next Story