நாகை, காரைக்கால் சுற்று வட்டாரங்களில் கனமழை

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள், மகிழ்ச்சியடைந்தனர்.
நாகை, காரைக்கால் சுற்று வட்டாரங்களில் கனமழை
x
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. நாகை, நாகூர், கீழ்வேளூர், தேவூர் சிக்கல் ,ஆழியூர் குருக்கத்தி, திருக்குவளை, சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல்  காரைக்கால், மாவட்டத்தில்  திருநள்ளாறு, அம்பகரத்தூர், கோட்டுச்சேரி, திருப்பட்டினம், வாஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையினால் தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

Next Story

மேலும் செய்திகள்