அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு : "திமுக ஆட்சி தான் காரணம்" - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு திமுக ஆட்சி தான் காரணம் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
x
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு திமுக ஆட்சி தான் காரணம் என முன்னாள் மத்திய  இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் 
குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடந்த குருபூஜையில் நிகழ்ச்சியில் மாநிலங்களைவை உறுப்பினர் இல.கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளை திமுக தலைவர் ஸ்டாலின் மூட தயாரா என கேள்வி எழுப்பினார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு திமுக ஆட்சி தான் காரணம் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்