பெரிய கருப்பண்ணசாமி கோயில் திருவிழா கோலாகலம் : 400 ஆடுகள் காணிக்கை
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கோம்பை கரையனூர் கிராமத்தில் பெரிய கருப்பணசாமி கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கோம்பை கரையனூர் கிராமத்தில் பெரிய கருப்பணசாமி கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, வந்தவழி கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட ஆடுகளை காணிக்கையாக கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். காணிக்கையாக கொடுக்கப்பட்ட ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, சமைத்து, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
Next Story