சி.பா.ஆதித்தனார் பெயரில் சிற்றிதழ் விருது : பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு

சி.பா.ஆதித்தனார் பெயரில் 'சிற்றிதழ் பரிசு' எனும் புதிய விருது தோற்றுவித்து, இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்தார்.
சி.பா.ஆதித்தனார் பெயரில் சிற்றிதழ் விருது : பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு
x
தமிழ்மொழியில் நாகரீகம், பண்பாடு, ஆகியவற்றை போற்றியும், பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் மாத இதழ் தேர்வு செய்யப்பட்டு 'சிற்றிதழ் பரிசு' என்றும் புதிய விருது வழங்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இந்த விருது ஒவ்வொன்றிற்கும், விருது தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்காக 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டார். 

37 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் : 


இதே போல், வள்ளலார், தேவநேயப் பாவணர், காரைக்கால் அம்மையார் பெயரில் புதிய விருது என்பது உள்ளிட்ட 37 அறிவிப்புகளை, தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்