சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.7000 : காவல் நிலையத்தில் ஒப்படைத்த செருப்பு தைக்கும் தொழிலாளி
கோபிசெட்டிபாளையத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 7 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
கோபிசெட்டிபாளையத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 7 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. பெரியார்திடல் அருகில் ராஜாமணி என்பவர் செருப்பு தைக்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் கடையின் முன் ரப்பர் பேண்ட் போட்டபடி 7 ஆயிரம் ரூபாய் பணம் கிடந்துள்ளது. அதனை எடுத்த ராஜாமணி, தனது நண்பரான சையத் அக்ரம் உதவியுடன் கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story