ஒப்பந்ததாரர்கள் அளித்த பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி

கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் பணியாற்றிவரும் பெண் துப்புரவு தொழிலாளி ராஜம் என்பவர் விஷம் அருந்தியும், தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஒப்பந்ததாரர்கள் அளித்த பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி
x
கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் பணியாற்றிவரும் பெண் துப்புரவு தொழிலாளி ராஜம் என்பவர் விஷம் அருந்தியும், தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்தும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை பறித்தனர். மேலும் விஷம் குடித்திருந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். களியக்காவிளை பேருந்து நிலையம் கழிப்பறை ஒப்பந்ததாரர்கள் சந்திரன் மற்றும் ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததே அவர் தற்கொலை முயற்சிக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்