"ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை" உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

"ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை" உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விநியோகம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை என்றும்,  அதில் கை வைப்பது, தேன் கூட்டில் கல் வீசுவதற்கு சமம் என்பதை மத்திய உணவு அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். "ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு" திட்டம் குறிப்பிட்ட தேதிக்குள் அமல்படுத்தப்பட்டு விடும் என்றும் "கெடு" விதிப்பது எதேச்சதிகாரமான செயல் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை", "அகில இந்திய நீதித்துறைத் தேர்வு" உள்ளிட்ட மத்திய அரசின் அறிவிப்புகளை ஆரம்ப நிலையிலேயே மாநில அரசு எதிர்க்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்