கண்கவர் ரயில் பெட்டியில் வகுப்பறைகள் : மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய முயற்சி

மதுரையில் ரயில் பெட்டி போன்று, கண்கவர் வடிவத்தில் அமைக்கப்பட்ட பள்ளிக்கு வர மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கண்கவர் ரயில் பெட்டியில் வகுப்பறைகள் : மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய முயற்சி
x
மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே மீனாட்சி பஜார் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான மதுரை கல்லூரி  மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதே வளாகத்தில் டவுன் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது.  இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சிறப்பு குழந்தைகளுக்காக செயல்படும் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ரயில் பெட்டி போன்ற வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. கண் கவர் வண்ணத்தில் ரயில் பெட்டியை போன்றே பள்ளி கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை இது பெரிதும் கவர்கிறது. பள்ளி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மாணவர்கள், பெற்றோர் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்