அணுக்கழிவு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது - ஸ்டாலின்

கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அணுக்கழிவு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது - ஸ்டாலின்
x
அவர் வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளம் அணுஉலை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டது, முக்கியமான நிபந்தனை எனத் தெரிவித்துள்ளார்.கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே அணுக்கழிவு மையம் கட்டுவதற்கு ஜூலை 10ஆம் தேதி  பொதுமக்கள் "கருத்துக் கேட்புக் கூட்டம்" நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.தமிழக மக்களின் உயிரைப் பணயமாக வைத்து,அணுக்கழிவு வசதிகளை உருவாக்குவது மனித உயிர்களை "சோதனைக்கூடப் பொருட்களாக" ஆக்குவதற்கு மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்ற சந்தேகமே எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அணுக்கழிவு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரை இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.எனவே, மத்திய அரசும், அதிமுக அரசும் மக்களின் பாதுகாப்பையும், சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவு மையம் கட்டும் முடிவினை உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்