"விரைவில் பிரசாரம் செய்வேன்" - விஜயகாந்த்
மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில் அதிமுக - தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் தர்மத்துக்கும் - அதர்மத்துக்கும் இடையே போர் நடைபெற உள்ள தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்றும் இதில் தர்மம் தான் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி மிகவும் நல்லவர் என்றும் விஜயகாந்த், பாராட்டு தெரிவித்துள்ளார். தமது கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற தேமுதிக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story