சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருப்பூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
x
திருப்பூர் கல்லூரி சாலையில் வசித்து வரும் தினேஷ்க்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில்,அதே பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை, தினேஷ் ஆசை வார்த்தை கூறி  பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், தாம் கர்ப்பமாகிவிட்டதாக சிறுமி, தினேஷிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தது உறுதியானது.  இதனையடுத்து தினேஷை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்