தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் கூட்டம் : டெல்லி செல்கிறார் சத்யபிரதா சாஹூ

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் கூட்டம் : டெல்லி செல்கிறார் சத்யபிரதா சாஹூ
x
17வது மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடைமுறை அமலில் உள்ள நிலையில், அது குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் இன்று கூட்டப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் அசோக் லலசா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பங்கேற்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்