கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தனியார் விடுதி உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு

தனியார் விடுதி உரிமையாளர்கள், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டக்கல்லூரி மாணவி புகார் தெரிவித்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தனியார் விடுதி உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு
x
சென்னை, பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரே, செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் விடுதியை தாமஸ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் தாமஸ் மற்றும் ஆறுமுகம், வெளியாட்களை விடுதிக்கு அழைத்து வந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளதாக மானாமதுரையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி   புகார் கூறியுள்ளார். மேலும் அவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து விடுதியில் தங்கி இருக்கும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், தாமஸ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சியை  சட்டக்கல்லூரி மாணவி செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விடுதி உரிமையாளர்கள்,  கண்மூடித்தனமாக தாக்கியதால் படுகாயம் அடைந்த அந்த  மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்