மத்திய பாதுகாப்பு வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து -அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம், அருவங்காடு வெடி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தீடீரென்று தீ விபத்து நிகழ்ந்தது.
மத்திய பாதுகாப்பு வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து -அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளர்கள்
x
நீலகிரி மாவட்டம், அருவங்காடு வெடி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தீடீரென்று தீ விபத்து நிகழ்ந்தது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 747 ஆம் பிரிவில், திடீர் என விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர். அதே சமயம் புகை மூட்டத்தால் தொழிலாளர் ஒருவருக்கு லேசான முச்சுத்திணறல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு போலீசார், பற்றி எரிந்த தீயை அணைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்