திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி மனு

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
x
திருவாரூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புயல் காரணமாக, பலர் தங்களது உடைமைகளையும், ஆவணங்களையும் இழந்துள்ளதால், இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் இல்லாததால், பலர் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் என்பதால், இடைத்தேர்தலை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்