குட்கா வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
குட்கா வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்
x
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட  குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உள்பட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான முதல்கட்ட குற்றப்பத்திரிகை கடந்த மாதம் 16ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக சுகாதாரத்துறை விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் அமைச்சரின் உதவியாளர் சரவணனுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உதவியாளர் சரவணன் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் இன்னும் சில தினங்களில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்