நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
x
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில்,   சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்  வேலூர், திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் சீரமைப்பு மற்றும் திருத்த பணிகள் குறித்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தயார் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டடது. 

Next Story

மேலும் செய்திகள்