உலககோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய வீரர் ஷிகர் தவான் விலகல் |

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார்.
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவானுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. மூன்று வாரத்திற்குள் அவரது காயம் குணமடையும் என மருத்துவர்கள் கூறியதால், அணியுடன் தவான் பயணிப்பார் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் காயம் குணமடைய கூடுதல் காலம் ஆகும் என்பதால் தொடரில் இருந்து தவான் விலகியுள்ளார். தவானுக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்தை  அணியில் சேர்க்க ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்