அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை - காங்.தலைவர் சோனியா காந்தி கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை - காங்.தலைவர் சோனியா காந்தி கண்டனம்
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே, லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில், இந்த விலை உயர்வை மேற்கொள்ள எந்தவித தர்க்க ரீதியிலான நியாயமும் இல்லை என சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 9 சதவிகிதம் வரை குறைந்திருந்த போதும் இந்த அரசு, எதையும் செய்யாமல் விட்டு விட்டதாக கடிதத்தில், சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்