டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் - வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் - வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை
x
டெல்லி  சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று  வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மொத்தம்  ஆயிரத்து 29 வேட்பாளர்கள் சார்பில் ஆயிரத்து 528 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று இறுதி நாள் என்ற நிலையில்,  நேற்று ஒரே நாளில் 806 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில்  670 பேர் ஆண்கள் மற்றும் 136 பேர் பெண்கள். இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ளவர்களில் 842 பேர் ஆண்கள் மற்றும் 187 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனுக்களை திரும்பப்  பெற நாளை கடைசி நாள் .


Next Story

மேலும் செய்திகள்