சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம்

சீன அதிபர் - பிரதமர் மோடி வருகையின் எதிரொலியாக மாமல்லபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம்
x
பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. மகாபலிபுரத்தின் புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கவுள்ளனர். இரு நாட்டு தலைவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைத்துள்ளன. பாதுகாப்பு முன்னேற்பாடு, ஆயத்த பணிகள் குறித்தும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் 2-ம் கட்டமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர். மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட10 பேர் கொண்ட குழுவினரும் மாமல்லபுரம் வந்துள்ளனர். கடற்கரை கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவிட்டனர். இதனால், உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது மாமல்லபுரம்.

Next Story

மேலும் செய்திகள்